சொந்த மண்ணில் விபூதி வைத்து 2024 ஆட்டத்தை ஆரம்பித்த ஈபிஎஸ்.. மெதுமெதுவாக பற்றும் தேர்தல் தீ

x

சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கமாக கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பாக இக்கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே பிரச்சாரத்தை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதேபோன்று வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கமாக இன்றைய தினம் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.

இங்கு அதிமுக சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் விக்னேஷ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்