DMK vs ADMK | இன்று அறிவிக்கும் தேர்தல் ஆணையம்.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிகவுக்கு மகிழ்ச்சி
ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணையம் மாநிலங்களவை தேர்தலுக்காக விண்ணப்பித்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஆறு வேட்பாளர்களும் இன்று போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவுள்ளனர். தமிழகத்திற்கான 6 மாநிலங்களவை சீட்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இதே போன்று அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு எதிரான போட்டியாளர்கள் இல்லாததால் அனைவரும் இன்று மாலை போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவுள்ளனர்.
