திமுக தொண்டர்களுக்கு திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் பா.ஜ.க ஒதுக்கும் நிதியின் வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டிவிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தி.மு.க தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிப்பதாகவும் மொழித்திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய
விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story