கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி? - அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி? - அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானதை எதிர்த்து, அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக ஞானசேகருக்கு சீட்டு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அதிமுகவுக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி தொண்டர்கள் திரண்டனர். அப்போது, ராஜா என்ற தொண்டர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பதற்றம் நிலவியது.
மேலும் அங்கு கூடிய அதிமுகவினர் திருப்பத்தூர் தொகுதியை, அதிமுகவே போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
