"அனைத்து கோவில்களின் தூய்மை பாதுகாக்கப்படும்" - அமைச்சர் சேகர் பாபு

x

திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சுவாமி தரிசனம் செய்தார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர் பாபு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிறப்பு தரிசனம் கடந்த 2 ஆண்டுகளாக முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திராமல் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்