சந்திரபாபு நாயுடு கைது - எதிர் எதிரே நிற்கும் ஒரே குடும்பத்தினர்

x

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் 4 மகள்களில் ஒருவரான புரந்தேஸ்வரி, ஆந்திர மாநில பாஜக தலைவராக உள்ளார். அவரது இளைய சகோதரியான புவனேஷ்வரி, கைதான முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியாவார். என்.டி.ராமாராவின் மகனும், புரந்தேஸ்வரி மற்றும் புவனேஷ்வரியின் சகோதரருமாகிய நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில், புரந்தேஸ்வரி பாஜகவில் இருப்பதால், உறவினர் என்ற வகையில் ஆறுதல் தெரிவிக்க முடியாத சூழலில் உள்ளார். மேலும் தனது சகோதரி புவனேஷ்வரிக்கு ஆதரவளிக்க முடியாத நிலையிலும் உள்ளார். அதேசமயம் நடிகர் பாலகிருஷ்ணா தனது சகோதரி புவனேஷ்வரிக்கு ஆதரவாக இருந்தாலும், அரசியல் ரீதியாக புரந்தேஸ்வரிக்கு எதிராக உள்ளார். சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில், அரசியல் சூழல் காரணமாக அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களே வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்