``என்ன பயன்?'' - அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் 48 கோடியே 95 லட்ச ரூபாய் கல்விக்கடனை ரத்து செய்வதாக, திமுக அரசு நாடகமாடி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2021 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை 16 ஆயிரத்து 302 கோடியாக உள்ள நிலையில், 48 கோடியை மட்டும் ரத்து செய்வதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக்கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம் சாதிப் பாகுபாடைத் தூண்ட வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்