Bihar | Election | "ஏன், ஒரு முஸ்லிம் DyCM ஆக கூடாதா..?" பீகார் தேர்தல் - ஓவைசி கேள்வி
பீகாரில் முஸ்லிம் ஒருவர் துணை முதலமைச்சராக கூடாதா? என எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், துணை முதலமைச்சர் வேட்பாளராக விகாஸ் சகானியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிஷான்கஞ்ச் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒவைசி, பீகார் மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 17 சதவீதம் அங்கம் வகித்த போதிலும், அந்த சமுதாயத்திலிருந்து ஒருவரை எதிர்க்கட்சிகள் துணை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், பிறருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தான் இஸ்லாமியர்கள் பயன்படுகிறார்களா? என ஆவேசமாக அவர் கேட்டார்.
