விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
Published on

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தலா1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com