

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிரிகாகுளம் மாவட்டம் எல்.என் பெட்டா கிராமத்தில் NREGS திட்டத்தின் சமூக தணிக்கைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை 3 பேரும், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.