2026 தேர்தலை முன்னிட்டு.. ஈபிஎஸ் அறிவித்த `மிகப்பெரிய’ வாக்குறுதி

2026 தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி கொடுத்த `மிகப்பெரிய’ வாக்குறுதி

தமிழ்நாடு அரசு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம் என தந்திரமாக பெயர் மாற்றி, அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி அமைத்த பிறகு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணி நாட்கள் 125-ல் இருந்து 150 நாட்களாக உயர்த்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com