#Breaking|| இரட்டை இலையை முடக்க சொன்ன ஓபிஎஸ்.. இறுதி முடிவு எடுத்தது தேர்தல் ஆணையம்

#Breaking|| இரட்டை இலையை முடக்க சொன்ன ஓபிஎஸ்.. இறுதி முடிவு எடுத்தது தேர்தல் ஆணையம்
Published on

மக்களவைத் தேர்தலில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.....

எடப ்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது....

தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு பதிலாக அவைத் தலைவர் டாக்டர். தமிழ் மகன் உசேன் கையொப்பமிட உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட்டு விட்டதால் மனு காலாவதி ஆகிவிட்டதால் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளன....

X

Thanthi TV
www.thanthitv.com