EPS-க்கு எதிரான வழக்கில் திருப்பம்

x

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனக்கு எதிராக ஈபிஎஸ் அவதூறு கருத்துக்களை கூறியதாக, முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில், ஈபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்