DMK | திமுக முக்கிய நிர்வாகி கைது செய்ய இறங்கிய பெரும்படை.. அரெஸ்ட் செய்யும் போது பெரும் பரபரப்பு
திமுக முக்கிய நிர்வாகி கைது செய்ய இறங்கிய பெரும்படை.. அரெஸ்ட் செய்யும் போது பெரும் பரபரப்பு
கார் பார்க் செய்வதில் தகராறு - திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செங்கல்பட்டில் கடை முன் வாகனம் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக, திமுக நகர செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்...புதிய பேருந்து நிலையம் அருகே ஜூஸ் கடைக்கு வந்த ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர், சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹோட்டல் ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது, ஹோட்டல் உரிமையாளரான திமுக நகர செயலாளர் நரேந்திரன், கவுன்சிலர் சந்தோஷ் உள்ளிட்டோர் தாக்கியதில் ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது... இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..
