முருகன் கோயில் சுவரை இடித்த மர்ம கும்பல்...போராட்டத்தில் குதித்த மக்கள் - திருச்சியில் பரபரப்பு

x

முருகன் கோயில் சுவரை இடித்த மர்ம கும்பல்...போராட்டத்தில் குதித்த மக்கள் - திருச்சியில் பரபரப்பு


திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர்களின் பூர்வீக முருகன் கோயில், ராமச்சந்திர நகர் பகுதியில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் சிலர் சமூக விரோத செயலில் ஈடுபடுவதால், நிதி திரட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எடமலைப்பட்டி பொதுமக்கள் தொடங்கினர். இந்நிலையில், சுற்றுச்சுவரை அருகில் உள்ள ராமச்சந்திர நகரை சேர்ந்தவர்கள் இடித்துவிட்டதாக குற்றம் சாட்டி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நீதிமன்ற அனுமதியுடன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ள எடமலைப்பட்டி பொதுமக்கள், ராமச்சந்திர நகரில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் என அனைவரும் ராமச்சந்திர நகர் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்