நிலவுக்கு செல்லும் இந்தியர்கள் - திரவ திட்ட இயக்குநர் சர்ப்ரைஸ் தகவல்

x

மனிதர்களை நிலவிற்கு அழைத்துச் செல்வதற்கான சோதனை நடைபெற்று வருவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநர் நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டி அளித்த அவர், நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக தரையிறங்கிய இந்தியாவை, உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக பெருமை தெரிவித்தார். சூரியனை ஆராய்ச்சி செய்வதில் 4வது நாடாக இந்தியா இருப்பதாக தெரிவித்த அவர், ககன்யான் திட்டத்தில் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்