Thiruppur | கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல்

கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல்

#Thiruppur | #Udumalai | #CCTV | #ThanthiTV Thiruppur | கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல் திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கினற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்பதில் தாமதமாகி வருவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தீர்த்த கிணற்றில் இரு தினங்களுக்கு முன் மணிகண்டன் என்ற இளைஞர், கிணற்று தடுப்பில் சாய்ந்து நின்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இறந்தவரின் உடலை உடுமலை தீயணைப்பு துறையைச் சேர்ந்த மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இரண்டு நாட்களாகியும், இறந்தவரின் உடல் மீட்கப்படவில்லை எனக் கூறி, உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, காவல் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, இளைஞரின் உறவின்ர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com