யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
Published on

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. யெஸ் வங்கியை கைப்பற்றி ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், மோசடிகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. வாராக்கடன் 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிய வந்துள்ளது. வாரக்கடன் 42 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com