நிறைவேறிய வக்ஃபு மசோதா - நவாஸ் கனி பரபரப்பு அறிவிப்பு

பாஜகவுக்கு மாற்றாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி மலரும் என்று, மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக கூட்டணியின் ஆட்சி அகற்றப்பட்டால்தான் நாட்டில் சுயாட்சி காப்பாற்றப்படும் என்று கூறினார். குஜராத் முதல்வராக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த சர்க்காரியா, பூஞ்ச் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது பிரதமர் பதவிக்கு வந்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்னவென்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com