"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, மத்திய அரசு உதவினால் சாத்தியம்" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு உதவினால், 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடலாம் என தெரிவித்துள்ளார்.
"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, மத்திய அரசு உதவினால் சாத்தியம்" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
Published on

டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு உதவினால், 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடலாம் என தெரிவித்துள்ளார். டெல்லிக்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவை என்றும், ஆனால் மத்திய அரசு தற்போது 40 லட்சம் தடுப்பூசி மட்டுமே வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இன்னும் 2.6 கோடி அளவுக்கு தடுப்பூசிகள் தேவை என்றும், தற்போது, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம் என்றும், டெல்லிக்கு தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com