உபியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 22 பேர் பலி - நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

x

உத்தர பிரதேச மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். மகா பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக 40க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் டிராக்டரில் பயணம் செய்துள்ளார். காஸ்கஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் குளத்திற்குள் கவிழ்ந்துள்ளது. இதில், 22 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்