உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் உள்ள பள்ளியை சுத்தம் செய்ய அங்குள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் தூய்மைப் பணி செய்த காட்சிகள் வெளியான நிலையில், விசாரணைக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். புகார் உண்மையென கண்டறிந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்