UttarPradesh | Crime | சிறுவனுக்கு குல்பி வாங்கித் தருவதாகக் கூட்டிச்சென்று டெனன்ட் செய்த கொடூரம்

சிறுவனுக்கு குல்பி வாங்கித் தருவதாகக் கூட்டிச்சென்று டெனன்ட் செய்த கொடூரம்

சிறுவனுக்கு குல்பி வாங்கித் தருவதாகக் கூட்டிச்சென்று டெனன்ட் செய்த கொடூரம் 6 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த நபர் - அதிர்ச்சி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், 6 வயது சிறுவனைக் கடத்தி கொலை செய்ததாக வாடகைதாரர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை இருந்த வீட்டு உரிமையாளரின் மகனான சிறுவனை குல்பி வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற கல்பேஷ் ராய், பணம் பறிக்கும் நோக்கில் சிறுவனைக் கடத்தியதாக கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உடலை பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டு, குடும்பத்தினருடன் இணைந்து சிறுவனைத் தேடுவது போல நடித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்பேஷ் ராய்-ஐ கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com