Uttar Pradesh | நீதிமன்றத்திற்கு வெளியே கொடூர கொலை - உ.பி.யில் அதிர்ச்சி

x

திருமணம் செய்ய காத்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி நீதிமன்றத்திற்கு வெளியே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் நாயிஃப் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், தனது உறவுக்கார பெண்ணை பதிவு திருமணம் செய்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் அழைத்து சென்றுள்ளார்.நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள ஸ்டூடியோவில் போட்டோ எடுப்பதற்காக நின்றிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியால் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தறுத்துவிட்டு தப்பியுள்ளனர்.ரத்த வெள்ளத்தில் சரிந்த நாயிஃப் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.முன்பகையால் இளைஞர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ள போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிரம்காட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்