நாட்டை உலுக்கிய கொல்கத்தா ஐஐஎம் மாணவி பாலியல் வழக்கில் எதிர்பாரா திருப்பம்

ஐஐஎம் மாணவி பாலியல் வன்கொடுமை - கைதான நபருக்கு ஜாமின்

கொல்கத்தா ஐஐஎம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கைதான நபருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பெண் மனோதத்துவ நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் புகார் அளித்துள்ள மாணவி விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 50,000 ரூபாய் பிணைத் தொகை விதித்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

X

Thanthi TV
www.thanthitv.com