Vairal Video | கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ
கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ
கொடூரமாக தாக்கி கொண்ட இரு குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, இடப்பிரச்சினை காரணமாக இரு குடும்பத்தினர் கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தலம்பட்டு கிராமத்தில், பொதுவான வழிப்பாதையை அடைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியதில், இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
