Tourist Bus | கொழுந்து விட்டு எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 50 பேரின் கதி?
Tourist Bus | கொழுந்து விட்டு எரிந்த பேருந்து.. உள்ளே இருந்த 50 பேரின் கதி?
தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து.. அதிர்ஷ்டவசமாக தப்பிய 50 பயணிகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானிலிருந்து கங்கை ஆற்றில் குளிக்க சோரோன் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து தீப்பிடித்துள்ளது. பேருந்தில் தீப்பற்றியவுடன் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விரைவாக செயல்பட்டு அனைத்து 50 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர்.
