அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. திருப்பதி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டது. இது ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம் என்றும், இதற்காக கோவில் அருகே 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com