

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்துவரும் வசந்த உற்சவத்தின் 2-வது நாளான இன்று மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சர்வபூபால வாகனத்தில் கோயில் கல்யாணய மண்டபத்தில் எழுந்தருளினார். ஊரடங்கு காரணமாக தங்கரத ஊர்வலம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.