தாயுடன் தூங்கிய கை குழந்தை கடத்தல்...தமிழகத்தை பரபரப்பாக்கிய விவகாரத்தில் தீயாய் பரவிய.அடுத்த அதிர்ச்சி வீடியோ

x

தூத்துக்குடியில் நான்கு மாத கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவன் கடத்தப்பட்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 9-ந்தேதி தூத்துக்குடி அந்தோணியார் கோயில் அருகே தாயுடன் தூங்கி கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், 10 தனி படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாட்களாகியும், இதுவரை குழந்தை கிடைக்காதநிலையில், மேலும் ஒரு சிறுவன் கடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்