தடியால் விரட்டிய முதியவர் - முட்டித் தூக்கிய காளை மாடு
உத்தரப்பிரதேசத்தில், முதியவரை காளை மாடு ஒன்று, கொம்புகளால் தூக்கி வீசியெறிந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர், தெருவில் சுற்றித்திரிந்த மாட்டை தடியால் விரட்ட முயன்றார். அப்போது அவரை அந்த காளை மாடு முட்டி வீசி எறிந்தது. இதனால் அலறிய முதியவரை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து காளை மாட்டை கால்நடைத் துறையினர் பிடித்துச் சென்றனர்.
Next Story
