Delhi Protest | கோரிக்கையை ஏற்றது அரசு - டெல்லியை நோக்கி பெரும் படை வரும் போதே திடீர் திருப்பம்
கோரிக்கையை ஏற்றது அரசு - டெல்லியை நோக்கி பெரும் படை வரும் போதே திடீர் திருப்பம்
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக டெல்லி நோக்கிப் புறப்பட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை எட்டியுள்ளது , ஹரியானா அரசு. விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஹரியானா வேளாண் அமைச்சர் ஷியாம் சிங் ராணா நேரில் சென்று விவசாய சங்கங்களின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெறப்பட்ட கோரிக்கைகள் மீது, அடுத்த 10 நாட்களுக்குள் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், காவலில் வைக்கப்பட்டுள்ள விவசாய தலைவர்களை உடனடியாக விடுதலை செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹரியானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
