நிலநடுக்கத்தால் குலுங்கிய பூமி - பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்
அசாமின் உடல்குரியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் நில அதிர்வு வடக்கு வங்கத்திலும், அண்டை நாடான பூடானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் மாலை 4.41 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Next Story
