காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்
Published on

காவிரி உபரி நீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com