Kochi | Gold Smuggling | Arrest | உள்ளாடைகளுக்குள் 2 கோடி தங்கம் | கொச்சியில் சிக்கிய தமிழக தம்பதி
கொச்சியில் ரூ.2 கோடி தங்கம் கடத்தல் - தமிழக தம்பதி கைது கொச்சி விமான நிலையத்தில், அபுதாபியில் இருந்து வந்த தமிழகத் தம்பதியிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ரிப்னாஸ் ஹமீது மற்றும் ஜனாபர் காதர் ஆகிய இருவரும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க, தங்கத்தைப் பசை வடிவில் மாற்றித் தங்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தனி அறையில் சோதனையிட்டபோது, 170 பவுன் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியிடம், கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
