தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமே தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பாலிநரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் விவகார வழக்கில், வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com