கோடையில் வெள்ளமா? மூழ்கிய பைக்.. தமிழகத்தை அதிரவிடும் காட்சிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த பலத்த மழையால் பொள்ளாச்சியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நியூ ஸ்கிம் ரோடு, மழைநீரில் மூழ்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலை அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்தது. ஆனால் இரவில் நீர் வடிந்து நியூ ஸ்கீம் ரோடு பகுதியில், வழக்கம்போல் போக்குவரத்து நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com