திருப்பதி மலையில் திடீர் ரெய்டு - அதிரும் ஆந்திரா
திருப்பதி மலையில் திடீர் ரெய்டு - அதிரும் ஆந்திரா
திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் வீட்டில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், திருப்பதி மலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திலும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாம் அலுவலகத்தின் முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அதிகாலை முதல் கண்காணித்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனை, தேவஸ்தான வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
