Vinayagar Chaturthi | மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தில் திடீரென பறந்த கற்கள் - பெரும் பரபரப்பு

மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தில் திடீரென பறந்த கற்கள் - பெரும் பரபரப்பு

Karnataka | Vinayagar Chaturthi | மசூதி அருகே விநாயகர் ஊர்வலத்தில் திடீரென பறந்த கற்கள் - பெரும் பரபரப்பு

#karnataka #vinayagarchaturthi #masjid #thanthitv

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு.. கர்நாடகாவில் பதற்றம் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் பதற்றம் நிலவுகிறது. பட்கல் பகுதியில் உள்ள மசூதி அருகே ஊர்வலம் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com