தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல் - மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டு

x

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவினர் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையை மாற்றான் தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்