விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்

விண்கலம் மூலம் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து 3 பேரை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்
Published on

விண்கலம் மூலம் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து 3 பேரை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பின்னர் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார். இதன்படி, 2022 ம் ஆண்டு, விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் 3 பேர், விண்வெளியில் ஒரு வாரம் தங்கி இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com