நாளை பாய்கிறது ஆதித்யா விண்கலம் - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிப்பு

x

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதால், அதற்கான கவுன்டவுன் இன்று காலை தொடங்க உள்ளது. ராக்கெட் ஏவும்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று என்று மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்