சொத்து தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்

சொத்து தகராறில் தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்
Published on

சொத்து தகராறில் நடுரோட்டில் வைத்து தந்தையை மகன் ஒருவர் கத்தியால் சராமாரி தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே காவல் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பிரதான சாலையில் மகன் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் தந்தையை கொடூரமாக தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்து விசாரித்ததில் சொத்து தகராறில் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com