அதிர வைத்த இ-மெயில்.. ஏர்போர்ட்-க்கு வெடிகுண்டு மிரட்டல்... அதிர்ந்த பயணிகள்...

x

மும்பை சர்வதேச விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக, மர்ம நபர்கள் இ-​மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெர்மினல் 2 பகுதியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், குண்டு வைக்காமல் இருக்க பிட்காயினில் ஒரு மில்லியன் டாலர் தர வேண்டும் என்றும் பேரம் பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, சஹார் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் குழுவினரை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்