Sheikh Hasina| ``எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல..’’- இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா துணிச்சல் முடிவு

Sheikh Hasina| ``எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல..’’- இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா துணிச்சல் முடிவு

``எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல.. தாய்நாட்டுக்கே செல்கிறேன்’’ - இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா கிளப்பிய பூகம்பம்

தாம் மீண்டும் வங்கதேசம் திரும்பப்போவதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தன் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, கைது அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், பயம் தனது கடமையை முடிவு செய்ய முடியாது' என்று கூறினார். மேலும், தான் மீண்டும் தாய்நாடு திரும்புவது அதிகாரத்தைக் கைப்பற்ற அல்ல என்றும், நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியினை மீட்டெடுக்கவே என்றும் அவர் தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல், விரைவில் வங்கதேசம் திரும்பப் போவதாக அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com