

கேரள ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. விழாவில் பேசிய சதாசிவம் ஒரு மாநிலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது அரசை மாற்றுவதற்கு பதிலாக தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே தனது நிலைபாடாக இருந்தது என கூறினார். வழியனுப்பு விழாவில் கேரள முதல்வர் பினரயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.