ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பு? -அரசு விளக்கம்

x

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பயின்று வரும் தமிழக மாணர்வகளை மீட்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது குறித்த நடவடிக்கைக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுடன் பேசி 52 மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை சாலை வழியாக அழைத்து வருவதற்கான சூழல் இல்லை என்றும், 52 மாணவர்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்