"சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் குறித்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை விவகாரத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.சிரி ஜகன், பி.ஆர்.ராமன் மற்றும் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com