சபரிமலை விவகாரம் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் விசாரணை ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் விசாரணை ஒத்திவைப்பு
Published on

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை 9 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரிக்கலாமா என்பது தொடர்பாக வியாழக்கிழமை முடிவு செய்யலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் வாதிடுவது தொடர்பாக நேரம் ஒதுக்குவது குறித்தும் வியாழக்கிழமை முடிவு செய்யலாம் என்றும் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com