

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை, கேரள அரசு அமல்படுத்தும் என உறுதியளித்தார். தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது என்பது அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க, ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.